கோலாலம்பூர், மே 08-
நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டத்தோ முத்தாங் தாகல் உடல் நிலை, கவலைக்கிடமான சூழ்நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் இருதய சிகிச்சை கழகமான IJN-னில் தற்போது அனுமதிக்கப்பட்டு இருக்கும் முத்தாங் தாகல் உடல் நிலை ஆபத்தான சூழ்நிலையில் இருப்பதாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் என்று சரவா துணை முதலமைச்சர் கெராவத் காலா தெரிவித்துள்ளார்.
தமது அலுவல் பயணத்தை தொடர முடியாமல் அஜர்பைஜான்- நாட்டிலிருந்து கோலாலம்பூருக்கு திரும்பி விட்ட முத்தாங் தாகல், -லின் உடல் நிலை குறித்து அவரின் குடும்ப உறுப்பினர்கள் தம்மிடம் தெரிவித்து இருப்பதாக கெராவத் காலா குறிப்பிட்டார்
தம்முடன் அடிக்கடி கோல்ப் விளையாடிய முத்தாங் தாகல், மிக ஆரோக்கியமாக இருக்கிறார் என்று தாம் கருதி வந்த நிலையில் அவர் கடும் இருதயக் கோளாற்றுக்கு ஆளாகியிருப்பது தம்மை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக கெராவத் காலா தெரிவித்துள்ளார்.
மலேசிய வரலாற்றில் டாயாக் பூர்வக்குடி இனம் மற்றும் சரவா மாநிலத்தைச் சேர்ந்த முதலாவது மேலவைத் தலைவர் என்ற பெருமையையும் சரவா, GPS கட்சியைச் சேர்ந்த 69 வயதுடைய முத்தாங் தாகல் பெறுகிறார்.
இவ்வாண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி சரவா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட முன்னாள் மேலவைத் தலைவர் டாக்டர் வான் ஜுனாடி துவாங்கு ஜாபர்-க்கு பதிலாக புதிய மேலவைத் தலைவராக முத்தாங் தாகல் நியமிக்கப்பட்டார்.








