May 22, 2026
Thisaigal NewsYouTube
காய்கறிகளின் விலைகளை ஏற்றுவதற்கு காரணங்களைக் கூறும் விவசாயிகள்!
தற்போதைய செய்திகள்

காய்கறிகளின் விலைகளை ஏற்றுவதற்கு காரணங்களைக் கூறும் விவசாயிகள்!

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 20-

தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக காய்கறிகள் உற்பத்தி 40 விழுக்காடு வரையில் பாதிக்கப்படுவதோடு அவற்றின் விலைகள் சந்தையில் கிடுகிடுவென உயரும் சாத்தியம் உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், விலை உயர்வை நியாயப்படுத்துவதற்காக, காய்கறிகளை நடுகின்ற விவசாயிகள் சாக்குப்போக்குக் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென நாட்டின் மிகப் பெரிய பேரங்காடிகளில் ஒன்றான MYDIN-னின் நிர்வாக இயக்குநர் அமிர் அலி மைடின் நினைவுறுத்தினார்.

தோட்டத்தொழில்துறைக்கு அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு எடுத்துக்கொள்வதற்கு அரசாங்கம் இதற்கு முன்பு அனுமதியளித்துள்ளது. அந்த தொழில்துறைக்கு அந்நிய தொழிலாளர்கள் போதுமான அளவில் இருக்கக்கூடும் என்றாரவர்.

அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ளும் 2.0 ஆட்பல மறுசீரமைப்பு திட்டம் இம்மாதம் 31ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக, உள்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபுடின் னசுதியன் இஸ்மாயில் , கடந்த 8 ஆம் தேதி கூறியதை அடுத்து, காய்கறிகளின் விலை உயரும் என கூறப்படுகின்றது.

Related News

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு