Jul 27, 2026
Thisaigal NewsYouTube
காய்கறிகளின் விலைகளை ஏற்றுவதற்கு காரணங்களைக் கூறும் விவசாயிகள்!
தற்போதைய செய்திகள்

காய்கறிகளின் விலைகளை ஏற்றுவதற்கு காரணங்களைக் கூறும் விவசாயிகள்!

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 20-

தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக காய்கறிகள் உற்பத்தி 40 விழுக்காடு வரையில் பாதிக்கப்படுவதோடு அவற்றின் விலைகள் சந்தையில் கிடுகிடுவென உயரும் சாத்தியம் உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், விலை உயர்வை நியாயப்படுத்துவதற்காக, காய்கறிகளை நடுகின்ற விவசாயிகள் சாக்குப்போக்குக் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென நாட்டின் மிகப் பெரிய பேரங்காடிகளில் ஒன்றான MYDIN-னின் நிர்வாக இயக்குநர் அமிர் அலி மைடின் நினைவுறுத்தினார்.

தோட்டத்தொழில்துறைக்கு அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு எடுத்துக்கொள்வதற்கு அரசாங்கம் இதற்கு முன்பு அனுமதியளித்துள்ளது. அந்த தொழில்துறைக்கு அந்நிய தொழிலாளர்கள் போதுமான அளவில் இருக்கக்கூடும் என்றாரவர்.

அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ளும் 2.0 ஆட்பல மறுசீரமைப்பு திட்டம் இம்மாதம் 31ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக, உள்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபுடின் னசுதியன் இஸ்மாயில் , கடந்த 8 ஆம் தேதி கூறியதை அடுத்து, காய்கறிகளின் விலை உயரும் என கூறப்படுகின்றது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்