Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நஜீப்பை வீட்டுக்காவலில் வைக்கவே அந்த உத்தரவு
தற்போதைய செய்திகள்

நஜீப்பை வீட்டுக்காவலில் வைக்கவே அந்த உத்தரவு

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 17-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் சிறைத் தண்டனை காலம், 12 ஆண்டுகளிலிருந்து 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது, வீட்டுக்காவலில் வைப்பதற்கே.கோலாலம்பூர், ஏப்ரல் 17-முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் சிறைத் தண்டனை காலம், 12 ஆண்டுகளிலிருந்து 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது, வீட்டுக்காவலில் வைப்பதற்கே.

பொது மன்னிப்பு வாரியம் வழங்கிய கடிதத்தில் அவ்வாறு குறிப்பிடப்பட்டு இருந்தது உண்மையே என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

நஜீப் தனது எஞ்சிய தண்டனைக் காலத்தை சிறையில் கழிக்கும்படி வலியுறுத்தப்படவில்லை. மாறாக, அந்த தண்டனை காலத்தை அவரை விட்டுக்காவலின் வாயிலாக கழிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட் இருந்தது என்று கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் சார்வு செய்துள்ள AFIDAVIT மனுவில் ஜாஹிட் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நஜீப்பின் தண்டனை காலம் குறைக்கப்பட்டது தொடர்பாக பொது மன்னிப்பு வாரியத்தின் கடிதத்தின் உள்ளடக்கத்தை கண்டறியும் பொருட்டு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நஜீப் சார்வு செய்துள்ள சீராய்வு மனுவை ஆதரித்து, அம்னோவின் தலைவர் அகமட் ஜாஹிட் இவ்விவரத்தை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் மாமன்னர் சுல்தான் அப்துல்லா தலைமையிலான மன்னிப்பு வாரியத்தின் அந்த கடிதம் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி வெளியிடப்பட்டு இருந்தது. மறுநாள் ஜனவரி 30 ஆம் தேதி தமது இல்லத்திற்கு வந்த முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் தெங்கு சாப்ருல் அப்துல் அஜீஸ், அந்த கடிதத்தின் உள்ளடக்கத்தை தம்மிடம் காட்டியதாக அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

நஜீப், தனது எஞ்சிய 6 ஆண்டு கால சிறைத்தண்டனை காலத்தை வீட்டுக்காவலில் கழிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததாக நஜீப்பின் வழக்கு மனுவை ஆதரிக்கும் தனது AFIDAVIT மனுவில் அகமட் ஜாஹிட் தெரிவித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்