Mar 22, 2026
Thisaigal NewsYouTube
PPR வீடுகளை வாடகைக்குவிட்டும் வருமானம் ஈட்டுவோர் மீது நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

PPR வீடுகளை வாடகைக்குவிட்டும் வருமானம் ஈட்டுவோர் மீது நடவடிக்கை

Share:

கோலாலம்பூர், ஜூன் 11-

அரசாங்கத்தின் உதவித்தொகை வழங்கப்பட்ட மக்கள் வீடமைப்பு திட்டம் - PPR-ரில் இடம்பெற்றுள்ளவர்கள், தங்களது வீடுகளை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டுவது கண்டறியப்பட்டால், அரசாங்கம் அவர்கள் மீது விரைந்து நடவடிக்கையை எடுக்கும்.

வீடமைப்பு ஊராட்சி துணை அமைச்சர் டத்தோ அய்மான் அதிரா சாபு, அந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சில தரப்பினர், தங்களக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டை, மூன்றாம் தரப்புக்கு வழங்கியுள்ளதை, அமைச்சு கடுமையாக கருதுகின்றது.

வாடகை அல்லது வீட்டு உரிமைக்கான உடன்படிக்கையின்படி, அத்தரப்பினரின் அச்செயல் பெரும் தவறு என கூறிய அய்மான் அதிரா, உடன்படிக்கையை மீறுவோருக்கு எதிராக கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள PPR வீடமைப்பு திட்டங்களில், வீடு ஒன்றுக்கு அரசாங்கம் 240 ஆயிரம் வெள்ளி உதவித்தொகையை வழங்கியுள்ளது. அதன் வழி, அத்திட்டத்தில் இடம்பெற்றவர்கள் வெறும் 35 ஆயிரம் வெள்ளியில் வீடுகளை வாங்கியுள்ளனர்.

மாதம் ஒன்றுக்கு அத்தரப்பினர் அதிகபட்சமாக 300 வெள்ளியை பொருளகங்களில் செலுத்தும் வேளையில், அவர்களில் சிலர், தத்தம் வீடுகளை வாடகைக்கு விட்டு, மாதத்திற்கு ஆயிரம் ரிங்கிட் வரையில் வருமானம் ஈட்டுவதாக புகார்கள் கிடைத்துள்ளன.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு