May 22, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் அனைத்து கிராமத் தலைவர் பொறுப்புகளையும் திரும்ப ஒப்படைக்கின்றது உம்னோ
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் அனைத்து கிராமத் தலைவர் பொறுப்புகளையும் திரும்ப ஒப்படைக்கின்றது உம்னோ

Share:

சிலாங்கூர், ஏப்ரல் 12-

சிலாங்கூரில் தங்களுக்கு மாநில அரசாங்கம் வழங்கிய 75 கிராமத் தலைவர்கள் அல்லது கிராம சமூக நிர்வகிப்பு மன்றத் தலைவர் பொறுப்புகளை திரும்ப ஒப்படைப்பதாக, சிலாங்கூர் உம்னோ தலைவர் டத்தோ வீரா மெகாட் சூல்கர்னாயின் ஒமார் டின் அறிவித்துள்ளார்.

அதற்கு பதிலாக, உம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மத் சாஹித் ஹமிடியின் புறநகர் மற்றும் கூட்டரசு மேம்பாட்டு அமைச்சின் கீழ் மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்படவிருக்கும் மதானி புறநகர் சமூக தலைவர் பொறுப்புகளில் அவர்கள் அனைவரும் நியமிக்கப்படுவார்கள் என அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட பொறுப்புகளுக்கு நியமிக்க வேண்டிய நபர்களின் பெயர்களை சிலாங்கூரிலுள்ள உம்னோவின் அனைத்து தொகுதிகளிடமும் வழங்கியுள்ளன. நோன்பு பெருநாள் கொண்டாட்டத்திற்கு பிறகு, அந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என மெகாட் சூல்கர்னாயின் குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரியில் சிலாங்கூர் உம்னோவுக்கு ஊராட்சி மன்றங்களில் வழங்கப்பட்ட 20 இடங்களை அக்கட்சி ஏற்றுக்கொள்ளாததால், 12 ஊராட்சி மன்றங்களில் 2024-2025 ஆம் ஆண்டு தவணைக்கான 272 புதிய உறுப்பினர்களை நியமிக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு