Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் அனைத்து கிராமத் தலைவர் பொறுப்புகளையும் திரும்ப ஒப்படைக்கின்றது உம்னோ
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் அனைத்து கிராமத் தலைவர் பொறுப்புகளையும் திரும்ப ஒப்படைக்கின்றது உம்னோ

Share:

சிலாங்கூர், ஏப்ரல் 12-

சிலாங்கூரில் தங்களுக்கு மாநில அரசாங்கம் வழங்கிய 75 கிராமத் தலைவர்கள் அல்லது கிராம சமூக நிர்வகிப்பு மன்றத் தலைவர் பொறுப்புகளை திரும்ப ஒப்படைப்பதாக, சிலாங்கூர் உம்னோ தலைவர் டத்தோ வீரா மெகாட் சூல்கர்னாயின் ஒமார் டின் அறிவித்துள்ளார்.

அதற்கு பதிலாக, உம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மத் சாஹித் ஹமிடியின் புறநகர் மற்றும் கூட்டரசு மேம்பாட்டு அமைச்சின் கீழ் மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்படவிருக்கும் மதானி புறநகர் சமூக தலைவர் பொறுப்புகளில் அவர்கள் அனைவரும் நியமிக்கப்படுவார்கள் என அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட பொறுப்புகளுக்கு நியமிக்க வேண்டிய நபர்களின் பெயர்களை சிலாங்கூரிலுள்ள உம்னோவின் அனைத்து தொகுதிகளிடமும் வழங்கியுள்ளன. நோன்பு பெருநாள் கொண்டாட்டத்திற்கு பிறகு, அந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என மெகாட் சூல்கர்னாயின் குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரியில் சிலாங்கூர் உம்னோவுக்கு ஊராட்சி மன்றங்களில் வழங்கப்பட்ட 20 இடங்களை அக்கட்சி ஏற்றுக்கொள்ளாததால், 12 ஊராட்சி மன்றங்களில் 2024-2025 ஆம் ஆண்டு தவணைக்கான 272 புதிய உறுப்பினர்களை நியமிக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்