May 22, 2026
Thisaigal NewsYouTube
தொலைப்பேசி அழைப்பிற்கு பதிலளித்ததால் விபத்து ஏற்பட்டது
தற்போதைய செய்திகள்

தொலைப்பேசி அழைப்பிற்கு பதிலளித்ததால் விபத்து ஏற்பட்டது

Share:

பத்து பஹாத், ஏப்ரல் 01 -

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 116.9 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் தொலைப்பேசி அழைப்பிற்கு பதிலளிக்க அவசர பாதையில் அக்கார் நிறுத்தப்பட்ட போது இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

முன்னதாக, 35 வயதுடைய முஹம்மத் பாரெட் சக்கரியா, ஆயேர் ஹித்தாம்-மிலிருந்து பாகோஹ்-விற்கு தனது மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்ததாக பத்து பஹாத் மாவட்ட காவல்துறையின் செயல் தலைவர் சுப்பரின்டென்டான் ஷாஹ்ரூல்லணுவார் முஷாடாட் அப்துல்லாஹ் சனி கூறினார்.

பாதிக்கப்பட்ட ஆடவர் அக்காரை தவிர்க்க முற்பட்ட வேளையில் அதன் மீது மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் அவரின் இரண்டு கைகளும் முறிவுற்றதாக ஷாஹ்ரூல்லணுவார் முஷாடாட் விவரித்தார்.

அவ்வாடவர் மூவாரில் உள்ள பாக்கார் சுல்தானாஹ் பாட்டிமாஹ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இறந்த வேளையில் அக்கார் ஓட்டுநர் பலத்த காயமின்றி உயிர் தப்பியதாக ஷாஹ்ரூல்லணுவார் முஷாடாட் மேலும் தெரிவித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு