ஓட்டுநர் உரிமமின்றி தலைநகரைச் சுற்றி மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.
இன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரையில் Dataran Merdeka - வில் மேற்கொண்ட Ops Samseng Jalanan திடீர் சோதனையின் மூலம் மொத்தம் 94 மோட்டார் சைக்கிள்களை போலீசார் கைப்பற்றியதாக Kuala Lumpur போக்குவரத்து குற்றப் புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர் Sarifudin Mohd Salleh கூறினார்.
மேலும், போலி பதிவு எண்ணை பயன்படுத்தி மோட்டார் சைக்கிளை ஓட்டியதற்காக 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக Sarifudin Mohd தெரிவித்தார்.








