Jun 11, 2026
Thisaigal NewsYouTube
குடும்பத் தகராறில் நேர்ந்த கத்திக்குத்து, 31 வயதுடைய நபர் பலி!
தற்போதைய செய்திகள்

குடும்பத் தகராறில் நேர்ந்த கத்திக்குத்து, 31 வயதுடைய நபர் பலி!

Share:

கடந்த மே 31-ஆம் தேதி நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 31 வயதுடைய அப்துல் ரஹ்மான் ஷா மியா என்பவர் கொல்லப்பட்டதோடு, அவரது மனைவி 26 வயதுடைய போர்மின் லால் மியா கத்தியால் காயப்படுத்தப்பட்டார்.

பினாங்கு- தாமான் பெலிபிஸ், ஜாவியில் நடந்த இக்கொலை சம்பவம் குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நிகழ்ந்துள்ளதாகப் போலீசாரின் முற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இக்கொலைச் சம்பவம் தொடர்பாக ரோஹிங்கியா இனத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஒஸ்மான் பாவ்டி அலம் என்பவர் இன்று ஜாவி மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தண்டனைச் சட்டம் பிரிவு 302 மற்றும் பிரிவு 324 ஆகியவற்றின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவருக்குப் பிணை மறுக்கப்பட்டு, வழக்கு வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, மலாய் மொழி புரியாததால் இவ்வழக்குடன் தொடர்புடைய மேலும் இரு ரோஹிங்கியா பெண்களுக்கு எதிரான குடிவரவுச் சட்டக் குற்றச்சாட்டுகளுக்கான விசாரணை, மியான்மர் மொழிபெயர்ப்பாளர் முன்னிலையில் நடத்துவதற்காக வரும் ஜூன் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related News

மலேசியாவில் மீண்டும் உயர்ந்த வேலையின்மை விகிதம்

மலேசியாவில் மீண்டும் உயர்ந்த வேலையின்மை விகிதம்

பினாங்கில் காகம், புறாக்களைச் சுடும் திட்டம், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து வழக்கறிஞர்கள் குழு கவலை!

பினாங்கில் காகம், புறாக்களைச் சுடும் திட்டம், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து வழக்கறிஞர்கள் குழு கவலை!

நெகிரி செம்பிலான் இளவரசர் துங்கு ஜைன் அல்-ஆபிதீனுக்கு 'துங்கு பங்லிமா பெசார்' அரச பட்டம் சூட்டப்பட்டது!

நெகிரி செம்பிலான் இளவரசர் துங்கு ஜைன் அல்-ஆபிதீனுக்கு 'துங்கு பங்லிமா பெசார்' அரச பட்டம் சூட்டப்பட்டது!

பிஎன் கூட்டணி தனிநபர் சொத்தல்ல என அகமது சம்சூரி அதிரடி!

பிஎன் கூட்டணி தனிநபர் சொத்தல்ல என அகமது சம்சூரி அதிரடி!

எம்ஏசிசி 'கார்ப்பரேட் மாஃபியா' சர்ச்சை, விசாரணை அறிக்கை எங்கே எனச் சங்கீத் கவுர் தியோ கேள்வி!

எம்ஏசிசி 'கார்ப்பரேட் மாஃபியா' சர்ச்சை, விசாரணை அறிக்கை எங்கே எனச் சங்கீத் கவுர் தியோ கேள்வி!

சிரம்பானில் நவ சக்தி ஆஞ்சநேயர் சன்னதியுடன் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் பக்திப் பரவசத்துடன் இனிதே நிறைவு

சிரம்பானில் நவ சக்தி ஆஞ்சநேயர் சன்னதியுடன் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் பக்திப் பரவசத்துடன் இனிதே நிறைவு