May 22, 2026
Thisaigal NewsYouTube
பத்து பேர் SOSMA சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

பத்து பேர் SOSMA சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 19-

கோலாலம்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் 6 துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்களுடன் பிடிபட்ட ஓர் இஸ்ரேலிய பிரஜை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று அந்நிய நாட்டுப்பிரஜைகள் உட்பட பத்து பேர் , 2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான SOSMA வின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, அவர்களுக்கான தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் துறை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய பிரஜை கைது செய்யப்பட்டது தொடர்பில் அந்த நபருடன் சேர்த்து மொத்தம் 18 பேர் வளைத்துப் பிடிக்கப்பட்டனர்.

அவர்களில் கோலசிலாங்கூரில் பிடிபட்ட ஒரு தம்பதியர், கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு விட்டனர். சம்பந்தப்பட்ட இஸ்ரேலிய பிரஜையான 38 வயதுடைய அவிட்டன் என்பவர் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

மேலும் ஐவர் விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டு விட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ரூடி முகமட் இசா தெரிவித்தார்.

Related News

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி