Mar 18, 2026
Thisaigal NewsYouTube
ஆஸ்திரேலிய பிரஜை சடலமாக மீட்டெடுப்பு
தற்போதைய செய்திகள்

ஆஸ்திரேலிய பிரஜை சடலமாக மீட்டெடுப்பு

Share:

அம்பாங், மார்ச் 19 -

அம்பாங், ஜாலான் பெம்பான் னில் உள்ள ஒரு வீட்டில் ஆஸ்திரேலிய பிரஜை ஒருவர் சுயநினைவின்றி உயிரிழந்த வேளையில் கண்டெடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

நேற்று நள்ளிரவு 12.19 மணியளவில் இச்சம்பவம் தொடர்பாக தீயணைப்பு, மீட்பு நிலையத்திற்கு ஓர் அவசர அழைப்பு கிடைக்க பெற்றதாக கோலாலம்பூர், மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

கெராமாட் தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து 10 தீயணைப்பு வீரர்கள் உட்பட ஒரு தீயணைப்பு வாகனமும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் மேலும் விவரித்தார்.

சம்பவ இடத்தில் சென்றடைந்த போது பாதிக்கப்பட்டவரின் வீட்டின் கதவு பூட்டியிருந்ததாகவும் திறந்து உள்ளே பார்த்தபோது 48 வயதுடைய அவ்வாடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் செய்தி தொடர்பாளர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அவ்விடத்தில் பாதிக்கப்பட்ட அவ்வாடவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று அவரின் தரப்பினர்கள் சந்தேகிப்பதாக கூறப்படுகின்றது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை