Jul 27, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் சோதனையிலிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த வெளிநாட்டு மீனவர்கள்!
தற்போதைய செய்திகள்

போலீஸ் சோதனையிலிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த வெளிநாட்டு மீனவர்கள்!

Share:

சபா பெர்னாம் மாவட்டம் பாகான் நஹோடா ஒமார் மீனவக் கிராமத்தில் இன்று காலை நடத்தப்பட்ட அதிரடி சோதனையின் போது, கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முயன்ற 6 வெளிநாட்டு மீனவர்கள் ஆற்றில் குதித்தனர்.

அவர்களில் சிலர் அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை நீரில் மூழ்கியபடி பதுங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ், குடிநுழைவுத் துறை, மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனமான எம்எம்இஏ மற்றும் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் மொத்தம் 79 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து சிலாங்கூர் மாநில துணை போலீஸ் தலைவர் முகமது ஜைனி அபு ஹசான் வெளியிட்டுள்ள தகவலில், நேற்று பிற்பகல் தொடங்கிய இந்த சிறப்பு நடவடிக்கை கோல சிலாங்கூர் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டதாகவும், அங்கு 125 பேரின் ஆவணங்கள் மற்றும் விவரங்கள் சோதனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பாகான் நஹோடா ஒமார் கடலோரப் பகுதிகள், மனிதக் கடத்தல் மற்றும் பல்வேறு எல்லைத் தாண்டிய குற்றச் செயல்களின் முக்கிய மையமாக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

மலாக்கா: மீன் தோல் எனக் கூறி 83.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சுறா துடுப்புகளைக் கடத்த முயன்ற முயற்சி முறியடிப்பு

மலாக்கா: மீன் தோல் எனக் கூறி 83.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சுறா துடுப்புகளைக் கடத்த முயன்ற முயற்சி முறியடிப்பு