இந்நாட்டில் மலாய்க்காரர் அல்லாத கட்சிகள் இனதுவேஷத்தையும், பிளவுகளையும் ஏற்படுத்துவதாக துன் மகாதீர் முகமது கூறியுள்ள குற்றச்சாட்டை மசீச மறுத்துள்ளது.
இனதுவேஷத்தை முன்நிறுத்தி, பேதங்களையும் பிளவுகளையும் ஏற்படுத்திக்கொண்டு வருகின்றவர் துன் மகாதீரே தவிர மலாய்க்காரர் அல்லாத கட்சிகள் அல்ல என்று மசீச உதவித் தலைவர் தி லியான் கேர் தெரிவித்துள்ளார்.
துன் மகாதீர் நாட்டிற்கு 22 ஆண்டு காலம் பிரதமராக பொறுப்பேற்று இருந்த போது, மலேசியர்களை இன ரீதியாகப் பிரித்தது மட்டுமல்ல, பழமைவாத மற்றும் தாராளவாதக் கொள்கைகளால் மலாய்க்காரரகளைப் பிளவுப்படுத்தினார் என்பதே சான்றாகும் என்று தி லியான் கேர் கூறினார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


