May 22, 2026
Thisaigal NewsYouTube
இரண்டாவது பெட்ரோல் குண்டு தாக்குதல், அனுமதிக்க முடியாது
தற்போதைய செய்திகள்

இரண்டாவது பெட்ரோல் குண்டு தாக்குதல், அனுமதிக்க முடியாது

Share:

புத்ராஜெயா, மார்ச் 30-

KK மார்ட் வர்த்தகத் தளத்தில் இன்று இரண்டாவது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இவ்விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைப்புட்டின் நசுட்டின் இஸ்மாயில்- லும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக PKR கட்சியின் பாசிர் குடாங் எம்.பி. ஹாசன் அப்துல் கரீம் தெரிவித்துள்ளார்.

அல்லா என்று பொறிக்கப்பட்ட காலூறைகளை விற்பனை செய்த KK மார்ட் - கடைக்கு எதிரான சர்ச்சையை தணிப்பதற்கு பிரதமரும், உள்துறை அமைச்சரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டுள்ளதாக அந்த எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாஹ் தமது அச்சத்தை தெரிவித்து இருப்பதுடன் இதற்கு பொறுப்பான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

அரச மலேசிய போலீஸ் படையினரும் இவ்விவகாரத்தில் எந்தவொரு தரப்பும் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்று நினைவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பல்வேறு இனங்கள் மற்றும் சமயத்தவர்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்படாமல் இருக்க இவ்விவகாரம் உடனடியாக கையாளப்பட வேண்டும் என்று ஹாசன் அப்துல் கரீம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு