Mar 19, 2026
Thisaigal NewsYouTube
இரண்டாவது பெட்ரோல் குண்டு தாக்குதல், அனுமதிக்க முடியாது
தற்போதைய செய்திகள்

இரண்டாவது பெட்ரோல் குண்டு தாக்குதல், அனுமதிக்க முடியாது

Share:

புத்ராஜெயா, மார்ச் 30-

KK மார்ட் வர்த்தகத் தளத்தில் இன்று இரண்டாவது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இவ்விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைப்புட்டின் நசுட்டின் இஸ்மாயில்- லும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக PKR கட்சியின் பாசிர் குடாங் எம்.பி. ஹாசன் அப்துல் கரீம் தெரிவித்துள்ளார்.

அல்லா என்று பொறிக்கப்பட்ட காலூறைகளை விற்பனை செய்த KK மார்ட் - கடைக்கு எதிரான சர்ச்சையை தணிப்பதற்கு பிரதமரும், உள்துறை அமைச்சரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டுள்ளதாக அந்த எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாஹ் தமது அச்சத்தை தெரிவித்து இருப்பதுடன் இதற்கு பொறுப்பான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

அரச மலேசிய போலீஸ் படையினரும் இவ்விவகாரத்தில் எந்தவொரு தரப்பும் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்று நினைவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பல்வேறு இனங்கள் மற்றும் சமயத்தவர்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்படாமல் இருக்க இவ்விவகாரம் உடனடியாக கையாளப்பட வேண்டும் என்று ஹாசன் அப்துல் கரீம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை