Jun 5, 2026
Thisaigal NewsYouTube
"கடனாக வழங்கப்பட்ட ஒவ்வொரு சென் காசும் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்" – மாரா தலைவர் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

"கடனாக வழங்கப்பட்ட ஒவ்வொரு சென் காசும் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்" – மாரா தலைவர் திட்டவட்டம்

Share:

கல்விக் கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தத் தவறும் மாணவர்களிடம் எந்தவித சமரசமும் செய்யப்படாது என்று மாரா எனப்படும் மஜ்லிஸ் அமானா ராக்யாட் கல்வி நிறுவனத்தின் தலைவர் அஷ்ரப் வஜ்டி டுசுகி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மக்களுடைய பணமே கல்விக் கடனாக வழங்கப்பட்டிருப்பதால், அந்த நிதியிலுள்ள ஒவ்வொரு சென் காசையும் மீட்டெடுப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மாரா தலைவராக தாம் பொறுப்பேற்றதிலிருந்து, கடன் தவணையை செலுத்தத் தவறும் மாணவர்களை நீதிமன்றம் மூலம் எதிர்கொள்வது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், இது குறித்து தாம் மாரா கவுன்சில் நிர்வாகத்திற்கு தெளிவான உத்தரவு வழங்கியுள்ளதாகவும், எந்தவொரு செல்வாக்கு மிக்க நபராயினும், அவர் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் கடன் விலக்கு கோரிக்கைகளுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மாராவுக்கு செலுத்த வேண்டிய 8 லட்சத்து 57,000 கல்விக் கடனை திருப்பிச் செலுத்துவதில், ஒரு பெண்ணும் அவரது மூன்று உத்தரவாததாரர்களும் தாக்கல் செய்த மேல்முறையீட்டை சுங்கை பட்டாணி உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அஷ்ரப் வஜ்டி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Related News

மலாக்கா பள்ளிவாசல் பாலியல் பலாத்காரப் புகார் - குற்றச்செயல்கள் எதுவும் இல்லை என போலீசார் உறுதி

மலாக்கா பள்ளிவாசல் பாலியல் பலாத்காரப் புகார் - குற்றச்செயல்கள் எதுவும் இல்லை என போலீசார் உறுதி

நெகிரி செம்பிலானில் புதிய யாங் டி-பெர்துவான் பெசார் அறிவிப்பு விழா - உண்டாங் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு

நெகிரி செம்பிலானில் புதிய யாங் டி-பெர்துவான் பெசார் அறிவிப்பு விழா - உண்டாங் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு

ஜோகூர், நெகிரி செம்பிலானில் தற்போதைய அனைத்து தொகுதிகளையும் தக்கவைக்க ஜசெக முடிவு

ஜோகூர், நெகிரி செம்பிலானில் தற்போதைய அனைத்து தொகுதிகளையும் தக்கவைக்க ஜசெக முடிவு

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதாக மந்திரி பெசார் அமினுடின் ஹாரூன் அறிவிப்பு /  அடுத்த 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதாக மந்திரி பெசார் அமினுடின் ஹாரூன் அறிவிப்பு / அடுத்த 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

சுபாங் ஜெயா மோனாஷ் பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்புச் சோதனை மேற்கொள்ளப்பட்டது

சுபாங் ஜெயா மோனாஷ் பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்புச் சோதனை மேற்கொள்ளப்பட்டது

கம்பாரில் 26 ஏக்கரில் புதிய மருத்துவமனை: டத்தோ அ. சிவநேசன் உறுதி

கம்பாரில் 26 ஏக்கரில் புதிய மருத்துவமனை: டத்தோ அ. சிவநேசன் உறுதி