May 22, 2026
Thisaigal NewsYouTube
'Molotov Cocktail' வீசிய மூன்று நபர்கள் கைது
தற்போதைய செய்திகள்

'Molotov Cocktail' வீசிய மூன்று நபர்கள் கைது

Share:

கூலாய், மார்ச் 15 -

கூலாய், தாமான் டாமாய் யில் முதியவர் ஒருவரின் வீட்டில் மோலோதொவ் கோக்டயில் பாட்டிலில் உள்ள வெடிகுண்டை வீசிய குற்றத்திற்காக மூன்று உள்ளூர் ஆண்களை போலீசார் கைது செய்தனர்.

நேற்று பிற்பகல் 1:50 மணியளவில் 70 வயதுடைய பெரியவர் ஒருவரிடம் இருந்து கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் தான் செங் லீ தெரிவித்தார்.

அந்த பெரியவர் வெளியே சென்று வீட்டிற்கு திரும்பிய போது தனது வீட்டிற்கு முன் பாட்டிலில் வெடிகுண்டு வீசப்பட்டு அப்பகுதி தீயில் எரிந்திருப்பது காணப்பட்டதாக தான் செங் லீ கூறினார்.

பின் வீட்டின் முன் இருந்த சி.சி.தி.வி கேமராவை சோதனையிட்ட போது சந்தேகிக்கும் இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து மோலோதொவ் கோக்டயில்லை வீசி சென்றது கண்டறியப்பட்டதாக அவர் இன்று ஓர் அறிக்கையில் மேலும் விளக்கினார்.

Related News