பினாங்கு, ஜாலான் கெராமாட் டில் உள்ள இரட்டை மாடி கடை வரிசை வீடுகளில், எட்டு வீடுகள் தீயில் அழிந்தன. இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் நிகழ்ந்தது. இரவு 8.04 மணியளவில் அவசர அழைப்பை பெற்ற ஜாலான் பேராக் கில் உள்ள தீயணைப்பு நிலையம், அவ்விடத்திற்கு வீரர்களை விரைந்து அனுப்பி வைத்ததுடன் இதர நிலையங்களின் உதவியை கோரியது.
இச்சம்பவத்தில் எட்டு கடை வீடுகள் முற்றாக அழிந்தன. பினாங்கு மாநிலத்தில் பிரசித்திப் பெற்ற நாசி கன்டார் கடையும் இத்தீவிபத்தில் அழிந்ததாக பினாங்கு மாநில தீயணைப்பு இலாகா தலைமை செயலாக்க அதிகாரி அசெலன் ஹாசன் தெரிவித்தார்.
இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அவர் மேலும் விவரித்தார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


