பினாங்கு, ஜாலான் கெராமாட் டில் உள்ள இரட்டை மாடி கடை வரிசை வீடுகளில், எட்டு வீடுகள் தீயில் அழிந்தன. இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் நிகழ்ந்தது. இரவு 8.04 மணியளவில் அவசர அழைப்பை பெற்ற ஜாலான் பேராக் கில் உள்ள தீயணைப்பு நிலையம், அவ்விடத்திற்கு வீரர்களை விரைந்து அனுப்பி வைத்ததுடன் இதர நிலையங்களின் உதவியை கோரியது.
இச்சம்பவத்தில் எட்டு கடை வீடுகள் முற்றாக அழிந்தன. பினாங்கு மாநிலத்தில் பிரசித்திப் பெற்ற நாசி கன்டார் கடையும் இத்தீவிபத்தில் அழிந்ததாக பினாங்கு மாநில தீயணைப்பு இலாகா தலைமை செயலாக்க அதிகாரி அசெலன் ஹாசன் தெரிவித்தார்.
இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அவர் மேலும் விவரித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


