பினாங்கு, ஜாலான் கெராமாட் டில் உள்ள இரட்டை மாடி கடை வரிசை வீடுகளில், எட்டு வீடுகள் தீயில் அழிந்தன. இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் நிகழ்ந்தது. இரவு 8.04 மணியளவில் அவசர அழைப்பை பெற்ற ஜாலான் பேராக் கில் உள்ள தீயணைப்பு நிலையம், அவ்விடத்திற்கு வீரர்களை விரைந்து அனுப்பி வைத்ததுடன் இதர நிலையங்களின் உதவியை கோரியது.
இச்சம்பவத்தில் எட்டு கடை வீடுகள் முற்றாக அழிந்தன. பினாங்கு மாநிலத்தில் பிரசித்திப் பெற்ற நாசி கன்டார் கடையும் இத்தீவிபத்தில் அழிந்ததாக பினாங்கு மாநில தீயணைப்பு இலாகா தலைமை செயலாக்க அதிகாரி அசெலன் ஹாசன் தெரிவித்தார்.
இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அவர் மேலும் விவரித்தார்.

Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்


