நிபோங் தெபால், ஜூன் 04-
அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பதற்கு முதலாளிமார்களுக்கு அரசாங்கம் நிர்ணியத்து இருந்த காலக்கெடு கடந்த மே 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த போதிலும் அந்த காலக்கெடுவை நீட்டிப்பதற்கு அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
வங்காளதேசத் தொழிலாளர்கள் உட்பட இனி எந்த நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களும் நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு அனுமதிக்கப்படாது என்று அமைச்சர் இன்று திட்டவட்டமாக குறிப்பிட்டார்.








