Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கடும் வறிய நிலை மக்கள் பிரச்சனைக்கு தீர்வா?
தற்போதைய செய்திகள்

கடும் வறிய நிலை மக்கள் பிரச்சனைக்கு தீர்வா?

Share:

கோலாலம்பூர், மார்ச் 22.

கோலாலம்பூரில் கடும் வறிய நிலையிலான மக்கள் பிரச்னைக்கு தீர்வுக்காணப்பட்டிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் கூறியிருந்தார்.

ஆனால், தாங்கள் மேற்கொண்டிருந்த ஆய்வில் நிலைமுறை அதற்கு நேர்மாறாக உள்ளதாக பெர்டிவி சூப் கிட்சேன் எனும் அரசு சாரா அமைப்பின் துணைத்தலைவர் லைலி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் அந்த அறிவிப்பு, பி40 தரப்பைச் சேர்ந்த வீடற்றவர்களுடன் பழகிவரும் சமூக தன்னார்வள பணியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக அவர் கூறினார்.

கோலாலம்பூர் மாநகர் மன்றம், சமூகநலத்துறை, போலீஸ் ஆகியவற்றுடன் இணைந்து தங்களின் அமைப்பு ஆய்வை மேற்கொண்டது. சுமார் 300 மீட்டர் இடைவெளியில் சாலைகளில் 200 வீடற்றவர்கள் இருப்பதைக் காண முடிந்தது.

பகுதிகள் வாரியாக பார்க்கையில் சில இடங்களில் வாரத்திற்கு ஆயிரம் உணவுகளும் இதர சில பகுதிகளில் இரண்டாயிரம் உணவுகளையும் தனது அமைப்பு வழங்கி வருவதாக லைலி இஸ்மாயில் கூறினார்.

சீன பெருநாள் கொண்டாட்டத்தின் போது, கோலாலம்பூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகியவற்றில் வறிய நிலையில் உள்ள மக்கள் பிரச்னைக்கு 100 விழுக்காடு தீர்வு காணப்பட்டதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்