May 22, 2026
Thisaigal NewsYouTube
கடும் வறிய நிலை மக்கள் பிரச்சனைக்கு தீர்வா?
தற்போதைய செய்திகள்

கடும் வறிய நிலை மக்கள் பிரச்சனைக்கு தீர்வா?

Share:

கோலாலம்பூர், மார்ச் 22.

கோலாலம்பூரில் கடும் வறிய நிலையிலான மக்கள் பிரச்னைக்கு தீர்வுக்காணப்பட்டிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் கூறியிருந்தார்.

ஆனால், தாங்கள் மேற்கொண்டிருந்த ஆய்வில் நிலைமுறை அதற்கு நேர்மாறாக உள்ளதாக பெர்டிவி சூப் கிட்சேன் எனும் அரசு சாரா அமைப்பின் துணைத்தலைவர் லைலி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் அந்த அறிவிப்பு, பி40 தரப்பைச் சேர்ந்த வீடற்றவர்களுடன் பழகிவரும் சமூக தன்னார்வள பணியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக அவர் கூறினார்.

கோலாலம்பூர் மாநகர் மன்றம், சமூகநலத்துறை, போலீஸ் ஆகியவற்றுடன் இணைந்து தங்களின் அமைப்பு ஆய்வை மேற்கொண்டது. சுமார் 300 மீட்டர் இடைவெளியில் சாலைகளில் 200 வீடற்றவர்கள் இருப்பதைக் காண முடிந்தது.

பகுதிகள் வாரியாக பார்க்கையில் சில இடங்களில் வாரத்திற்கு ஆயிரம் உணவுகளும் இதர சில பகுதிகளில் இரண்டாயிரம் உணவுகளையும் தனது அமைப்பு வழங்கி வருவதாக லைலி இஸ்மாயில் கூறினார்.

சீன பெருநாள் கொண்டாட்டத்தின் போது, கோலாலம்பூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகியவற்றில் வறிய நிலையில் உள்ள மக்கள் பிரச்னைக்கு 100 விழுக்காடு தீர்வு காணப்பட்டதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு