துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிம் ஹமிடிக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கில் அவர் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டது குறித்து அதிகமானோர் அதிருப்தியில் இருப்பதை தம்மால் உணர முடிவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால், அகமட் ஜாஹிட்டை நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு முன்னாள் சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹரூண், வலுவான காரணங்களை முன்வைத்திருப்பதாகவும் பிரதமர் விளக்கினார்.
இது முழுக்க முழுக்க சட்டம் சம்பந்தப்பட்ட விவகாரம். இதனை முடிவு செய்தவர் முன்னாள் சட்டத்துறை தலைவர் இட்ருஸ் ஹரூண். எனவே சட்டத்துறை தலைவரின் இந்த முடிவை கேள்வி எழுப்புவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது.
ஆனால், டான்ஸ்ரீ முகைதீன் யாசின் நாட்டின் பிரதமராக இருந்த போது, அவரால் சட்டத்துறை தலைவாக நியமிக்கப்பட்ட இட்ருஸ் ஹரூண்தான் இந்த முடிவை எடுத்துள்ளார். எனவே அவரின் முடிவில் தாம் தலையிட இயலாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் விளக்கம் அளித்துள்ளார்.

தற்போதைய செய்திகள்
துணைப்பிரதமர் ஜாஹிட் விவகாரத்தில் மக்களின் அதிருப்தியை உணர முடிகிறது - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
Related News

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்


