Jul 6, 2026
Thisaigal NewsYouTube
பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்

Share:

ஈப்போ, ஜூன்.12-

கிழக்கு மேற்கு சாலையில் கெரிக்கில் கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த உப்சி பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்கள் உயிரிழந்த பேருந்து விபத்து தொடர்பில் அந்த பேருந்து ஓட்டுநர் இன்று கைது செய்யப்பட்டார்.

கடந்த நான்கு நாட்களாக தைப்பிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 39 வயதுடைய அந்த பேருந்து ஓட்டுநர், வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மாலை 5.45 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.

1987 ஆம் ஆண்டு போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அந்த பேருந்து ஓட்டுநர், தைப்பிங்கிலிருந்து கெரிக் மாவட்ட போலீஸ் நிலையத்திற்குக் கொண்டுச் செல்லப்படுவார் என்று டத்தோ நூர் ஹிசாம் குறிப்பிட்டார்.

Related News