Mar 21, 2026
Thisaigal NewsYouTube
21 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மாணவி மரணம்
தற்போதைய செய்திகள்

21 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மாணவி மரணம்

Share:

பினாங்கு, மே 23-

தலைநகரில் தனியார் உயர்கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவி ஒருவர் பினாங்கு, தஞ்சோங் பூங்கா-வில் உள்ள ஒரு தங்கும் விடுதியின் 21 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து இரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டார்.

நேற்று மாலை 3.35 மணியளவில் பாதிக்கப்பட்ட 24 வயதுடைய மாணவியின் உடல் பொதுமக்களால் கண்டறியப்பட்ட பின் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட மாணவி அந்த தங்கும் விடுதிக்கு சக ஆண் தோழருடன் சென்றதாகவும், அவ்விருவரும் அறைக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே இச்சம்பவம் நிகழ்ந்திருப்பதாக தெரியப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்பதுடன் தரை தளத்தில் மக்கள் கூடியிருந்ததைக் கண்டு அவ்விடத்திற்கு சென்று பார்த்த போதுதான் அது தம்முடைய தோழி என்பதை உணர்ந்ததாக பாதிக்கப்பட்டவரின் தோழன் கூறியிருந்தார்.

இதில் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக எந்தவொரு சாட்சியங்களும் இல்லாததால் இது ஒரு திடீர் மரணமே என்று விசாரணையில் தெரியவந்ததாக தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் ரஸ்லாம் அப்துல் ஹமீது தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து