Fentanyl வகையை சேர்ந்த போதைப்பொருள் நாட்டிற்குள் நுழையவில்லை அல்லது அதனை கடத்திக்கொண்டு வரும் முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத் தொழிப்பு பிரிவின் இயக்குநர் Datuk Khaw Kok Chin தெரிவித்தார்.
மலேசியாவில் Fentanyl வகையை சேர்ந்த போதைப்பொருள் இதுவரையில் கண்டறியப்படவில்லை. உளவுத்துறை தகவலின்படி அது மலேசிய சந்தையில் புழக்கத்தில் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலை நாடுகளில் Fentanyl வகை மாத்திரைகள், புற்று நோய் அல்லது கடும் வலியை தாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மயக்கத்தன்மையை ஏற்படுத்த வல்ல Fentanyl, அதிக பரவசமூட்டும் போதைப்பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.








