Jul 27, 2026
Thisaigal NewsYouTube
காதலியை 23 ஆவது மாடியிலிருந்து தள்ளிய நாதன், மனநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்
தற்போதைய செய்திகள்

காதலியை 23 ஆவது மாடியிலிருந்து தள்ளிய நாதன், மனநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 19-

ஒரு தாய்லாந்து பிரஜையான தனது காதலியை ஆடம்பர அடுக்குமாடி வீட்டின் 23 ஆவது மாடியிலிருந்து கீழே தள்ளி கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒரு லோரி ஓட்டுநரான நாதன் என்பவரை மனநிலை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு ஷா ஆலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

பேரா, உலு கிந்தா, தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள பஹாகியா மன நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நாதனின் மனநிலையை பரிசோதனை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதிப்பதாக மஜிஸ்ட்ரெட் முகமது ரெட்சா அசார் தெரிவித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு விபத்தில் சிக்கிய நாதன், தலையில் ஏற்பட்ட ரத்த கசிவின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பில் அவரிடமிருந்து எந்தவொரு உத்தரவையும் பெற முடியவில்லை. எனவே அவரின் மனநிலையை சோதனை செய்வதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று நாதனின் வழக்கறிஞர் சிவநந்தன் ராகவன் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

நாதன் ஆரோக்கியமான நிலையில் உள்ளார் என்பது உறுதிப்படுத்தப்படுமானால், அவருக்கு எதிரான கொலை வழக்கை தொடர்வதில் எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை என்று வழக்கறிஞர் சிவநந்தன் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு பிராசிகியூஷன் தரப்பு எந்தவொரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

37 வயதுடைய V. நாதன், கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு 10.02 மணியளவில் ஷா ஆலம், செக்சேன் U13, செத்தியா ஆலாமில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீட்டின் 23 ஆவது மாடியிலிருந்து தனது காதலி 32 வயதுடைய மாவிகா லும்யாய் என்பவரை கீழே தள்ளி கொன்றதாக கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் நாதன் கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்