மலாக்காவில் இணைய குற்றங்கள் அதிகரித்து வருவதாக அம்மாநில போலீஸ் தலைவர் சுல்கைரி முக்தார் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு, ஜனவரி 1-ஆம் தேதி முதல் இதுவரை 538 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவ்வழக்குகளில், மொத்தம் 8.59 மில்லியன் ரிங்கிட் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
அவற்றில் இணைய வர்த்தக மோசடிகளில் 212 வழக்குகள் பதிவாகி, 1.65 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதேவேளையில், இணைய முதலீட்டு மோசடிகளில் 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3.55 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுல்கைரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போலி வங்கிக் கடன், வேலைவாய்ப்பு, தொலைப்பேசி மோசடி குறிப்பாக காதல் மோசடி உள்ளிட்ட மோசடிகளிலும் 3 மில்லியனுக்கும் அதிகமான இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் இணைய பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.








