Jul 27, 2026
Thisaigal NewsYouTube
தொகுதி எல்லை மறுசீரமைப்பை அரசியல் கட்சிகள் தீர்மானிக்க முடியாது
தற்போதைய செய்திகள்

தொகுதி எல்லை மறுசீரமைப்பை அரசியல் கட்சிகள் தீர்மானிக்க முடியாது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 25-

நாட்டில், தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பை தீர்மானிப்பதற்கான அதிகாரம், அரசியல் கட்சிகளுக்கு துளியும் கிடையாது என செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் தெரிவித்தார்.

தேர்தல் தொகுதிகளுக்கான எல்லை மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான அணுகுமுறையில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே இணக்கம் காணப்பட வேண்டும் என பெரிக்காதான் நசியனாலைச் சேர்ந்த இந்திரா மக்கோத்தா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சைப்புடின் அப்துல்லா வலியுறுத்தியிருந்தது தொடர்பில், அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.

சம்பந்தப்பட்ட பரிந்துரைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் உடன்படுமாயின், பின்னர் எங்கிருந்து அதற்கான அனுமதியைப் பெறுவது என்ற கேள்வியை முன்வைத்த வில்லியம் லியோங், சைப்புடின் அப்துல்லா முதலில் கூட்டரசு அரசியலைமைப்பு சட்டத்தை முறையாக படிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அந்த சட்டத்தின் படி, தேர்தல் தொகுதிகளுக்கான எல்லை மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதை, வில்லியம் லியோங் சுட்டிக்காட்டினார்.

இதற்கு முன்பு, பெர்சே அமைப்பின் கருத்தரங்களில் கலந்துக்கொண்டிருந்த சைப்புடின் அப்துல்லா, நடப்பிலுள்ள தொகுதி எல்லை வரையறை, குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக உள்ளதாக குற்றம் சாட்டியதோடு, அவற்றில், மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி இருந்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்