Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மாணவரை போலீஸ் அதிகாரி கொன்ற வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்
தற்போதைய செய்திகள்

மாணவரை போலீஸ் அதிகாரி கொன்ற வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்

Share:

ஈப்போ, மார்ச் 21 -

மாணவரை போலீஸ் அதிகாரி கொன்ற வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்

17 வயதுடைய மாணவருக்கு மரணம் விளைவித்ததாக காவல்துறையின் மூத்த அதிகாரி மோஹ்த். நஸ்ரி அப்துல் ரசாக் மீதான வழக்கை, ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதாக இன்று அறிவித்துள்ளது.

அரசு வழக்கறிஞர் தரப்பில் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கையை ஏற்று அத்தீர்ப்பை வழங்கிய மாஜிஸ்திரேட் S. புனிதா, உயர்நீதிமன்றத்தில் அவ்வழக்கின் மறுசெவிமடுப்புக்கான தேதியை நிர்ணயிக்கவில்லை.

கடந்தாண்டு டிசம்பர் 15ஆம் தேதி மதியம் 12.05 முதல் 12.40 வரையிலுள்ள இடைப்பட்ட காலத்தில், ஈப்போ, ஜாத்தி இடைநிலைப்பள்ளிக்கு அருகில், டிஎஸ்பி பதவியைக் கொண்ட அந்த போலீஸ் அதிகாரி அக்குற்றத்தை புரிந்ததாக இதற்கு முன்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

மோட்டார்சைக்கிளில் வந்த முகமது ஜாஹாரிப் அஃபேன்டி முஹ்த் சம்ரி எனும் மாணவரை, அவர் தனது வாகனத்தால் மோதி தள்ளி இழுத்துச் சென்றதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது, நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்