Mar 18, 2026
Thisaigal NewsYouTube
மாணவரை போலீஸ் அதிகாரி கொன்ற வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்
தற்போதைய செய்திகள்

மாணவரை போலீஸ் அதிகாரி கொன்ற வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்

Share:

ஈப்போ, மார்ச் 21 -

மாணவரை போலீஸ் அதிகாரி கொன்ற வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்

17 வயதுடைய மாணவருக்கு மரணம் விளைவித்ததாக காவல்துறையின் மூத்த அதிகாரி மோஹ்த். நஸ்ரி அப்துல் ரசாக் மீதான வழக்கை, ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதாக இன்று அறிவித்துள்ளது.

அரசு வழக்கறிஞர் தரப்பில் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கையை ஏற்று அத்தீர்ப்பை வழங்கிய மாஜிஸ்திரேட் S. புனிதா, உயர்நீதிமன்றத்தில் அவ்வழக்கின் மறுசெவிமடுப்புக்கான தேதியை நிர்ணயிக்கவில்லை.

கடந்தாண்டு டிசம்பர் 15ஆம் தேதி மதியம் 12.05 முதல் 12.40 வரையிலுள்ள இடைப்பட்ட காலத்தில், ஈப்போ, ஜாத்தி இடைநிலைப்பள்ளிக்கு அருகில், டிஎஸ்பி பதவியைக் கொண்ட அந்த போலீஸ் அதிகாரி அக்குற்றத்தை புரிந்ததாக இதற்கு முன்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

மோட்டார்சைக்கிளில் வந்த முகமது ஜாஹாரிப் அஃபேன்டி முஹ்த் சம்ரி எனும் மாணவரை, அவர் தனது வாகனத்தால் மோதி தள்ளி இழுத்துச் சென்றதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது, நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை