May 22, 2026
Thisaigal NewsYouTube
மாணவரை போலீஸ் அதிகாரி கொன்ற வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்
தற்போதைய செய்திகள்

மாணவரை போலீஸ் அதிகாரி கொன்ற வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்

Share:

ஈப்போ, மார்ச் 21 -

மாணவரை போலீஸ் அதிகாரி கொன்ற வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்

17 வயதுடைய மாணவருக்கு மரணம் விளைவித்ததாக காவல்துறையின் மூத்த அதிகாரி மோஹ்த். நஸ்ரி அப்துல் ரசாக் மீதான வழக்கை, ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதாக இன்று அறிவித்துள்ளது.

அரசு வழக்கறிஞர் தரப்பில் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கையை ஏற்று அத்தீர்ப்பை வழங்கிய மாஜிஸ்திரேட் S. புனிதா, உயர்நீதிமன்றத்தில் அவ்வழக்கின் மறுசெவிமடுப்புக்கான தேதியை நிர்ணயிக்கவில்லை.

கடந்தாண்டு டிசம்பர் 15ஆம் தேதி மதியம் 12.05 முதல் 12.40 வரையிலுள்ள இடைப்பட்ட காலத்தில், ஈப்போ, ஜாத்தி இடைநிலைப்பள்ளிக்கு அருகில், டிஎஸ்பி பதவியைக் கொண்ட அந்த போலீஸ் அதிகாரி அக்குற்றத்தை புரிந்ததாக இதற்கு முன்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

மோட்டார்சைக்கிளில் வந்த முகமது ஜாஹாரிப் அஃபேன்டி முஹ்த் சம்ரி எனும் மாணவரை, அவர் தனது வாகனத்தால் மோதி தள்ளி இழுத்துச் சென்றதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது, நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

Related News

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்