Mar 19, 2026
Thisaigal NewsYouTube
இருவருக்கு மரணம் விளைவித்தவருக்கு தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

இருவருக்கு மரணம் விளைவித்தவருக்கு தடுப்புக்காவல்

Share:

ஜாலான் ஈப்போ, ஏப்ரல் 06-

நேற்று வெள்ளிக்கிழமை சுங்கை சிப்புட் வட்டாரத்தில் மோட்டார் சைக்கிளை மோதி, இரு சகோதர்களுக்கு மரணம் விளைவித்ததாக நம்பப்படும் Four Wheel Drive வாகன ஓட்டுநரான குத்தகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டுள்ளது.

50 வயதுடைய அந்த சந்தேகப்பேர்வழி, விபத்துக்கு பிறகு தப்பிச் சென்று விட்டதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் அவர் பிடிபட்டுள்ளார். அவரை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரையில் தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற அனுமதியை பெற்றுள்ளனர்.

ஜாலான் ஈப்போ – கோலா கங்சார் சாலையில் சுங்கை சிப்புட், தாமான் டேசா ஜாயா அருகில் நிகழ்ந்த இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது அஹ்மத் மரிக்ஹ் நோராஜியான் மற்றும் அவரின் 17 வயது சகோதரர் அஹ்மத் சுஹாய் நோராஜ்லான் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.

Related News