Mar 10, 2026
Thisaigal NewsYouTube
நஜீப் வழக்கில் மார்ச் 31 ஆம் தேதி தீர்ப்பு
தற்போதைய செய்திகள்

நஜீப் வழக்கில் மார்ச் 31 ஆம் தேதி தீர்ப்பு

Share:

SRC International லஞ்ச ஊழல் வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்யக் கோரி முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக் செய்துக்கொண்ட சீராய்வு மனு மீதான வழக்கில் வரும் மார்ச் 31 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது.
தமக்கு எதிரான தண்டனையை உறுதி செய்துள்ள கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட வேண்டும் என்று நஜீப் தமது சீராய்வு வழக்கு மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கான தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக நஜீபின் வழக்கறிஞர் குழுவைச் சேர்ந்த muhammad Farhan muhammad shafee தெரிவித்தார்.

Related News