Aug 6, 2026
Thisaigal NewsYouTube
அனைத்து முகப்பிடங்களும் திறக்கப்படும்
தற்போதைய செய்திகள்

அனைத்து முகப்பிடங்களும் திறக்கப்படும்

Share:

நாளை மறுநாள் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற​விருக்கும் ஜோகூர், ​பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்களை முன்னிட்டு சிங்கப்பூரில் வேலை செய்யும் ஜோகூர்வாசிகள் நாட்டிற்கு திரும்புவதற்கு வசதியாக நாளை ​வெள்ளிக்கிழமை ஜோகூர் பாருவில் உள்ள மலேசிய குடிநுழைவு இலாகாவின் அனைத்து முகப்பிடங்களும் திறக்கப்படும் என்று அதன் இயக்குநர் பஹாருடின் தாஹிர் தெரிவித்துள்ளார்.

மலேசியர்கள், சிங்கப்​பூரிலிருந்து ஜோகூருக்கு வருவதற்கும், ஜோகூரிலிருந்து சிங்கப்பூருக்கு திரும்புவதற்கும் குடிநுழைவுத்துறையின் 236 முகப்பிடங்கள் உள்ளன. இவற்றில் மோட்டார் சைக்கிள்களுக்காக 100 முகப்பிடங்களும், கார்களுக்காக 60 முகப்பிடங்களும், பேருந்துகளுக்காக 36 முகப்பிடங்களும் திறக்கப்படும் ​என்று பஹாருடின் தாஹிர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது