Jul 27, 2026
Thisaigal NewsYouTube
42 பேருந்துகள் சாலையில் நிறுத்தப்பட்டன
தற்போதைய செய்திகள்

42 பேருந்துகள் சாலையில் நிறுத்தப்பட்டன

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 09-

கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மேற்கொண்ட 2024 ஆம் ஆண்டு ஓப்ஸ் ஹரி ராயா ஐடில்பித்ரி திடீர் சோதனையில் மொத்தம் 42 பேருந்துகள் தொழில்நுட்ப கோளாறின் காரணமாக சாலையில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

54 பேருந்து நிலையங்கள் உட்பட 28 டெர்மினல் ஆகிய இடங்களில் 3,799 பேருந்துகள் சோதனையிடப்பட்டதாக சாலை போக்குவரத்துத்துறையின் மூத்த அமலாக்க இயக்குநர் லோக்மான் ஜமான் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட 42 பேருந்துகளும் தொழில்நுட்ப கோளாறு காரணங்களினால் அவற்றை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்று லோக்மான் ஜமான் இன்று டெர்மினல் பெர்ஸெப்பாடு செலாத்தான்- னில் சோதனையிட்ட போது தெளிவுப்படுத்தினார்.

47 பேருந்து ஓட்டுநர்களுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாதது, தொலைப்பேசி பயன்படுத்தி பேருந்து ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் சமான்கள் வழங்கப்பட்டதாக லோக்மான் ஜமான் அறிவித்தார்.

84 ஜேபிஜே அதிகாரிகள் ரகசியமாக பேருந்தில் சென்று ஆபத்தான முறையில் பேருந்துகளை ஓட்டுதல் மற்றும் 63 குற்றங்களை பதிவு செய்திருப்பதாக அவர் விளக்கினார். இச்சோதனை ஏப்ரல் 20 ஆம் தேதி வரையில் தொடரும் என்று லோக்மான் ஜமான் நினைவுறுத்தியுள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்