Mar 18, 2026
Thisaigal NewsYouTube
உள்நாட்டு பச்சை அரிசியை அதிக இலாபத்திற்காக விலை உயர்த்தும் தரப்பினரை அரசாங்கம் தற்காக்காது
தற்போதைய செய்திகள்

உள்நாட்டு பச்சை அரிசியை அதிக இலாபத்திற்காக விலை உயர்த்தும் தரப்பினரை அரசாங்கம் தற்காக்காது

Share:

கோலாலம்பூர், மார்ச் 20-

உள்நாட்டு பச்சை அரிசியை அதிக இலாபத்தைப் பெறுவதற்காக விலையை விருப்பத்திற்கு ஏற்ப உயர்த்தும் தரப்பு உள்ளது கண்டறியப்பட்டால், அதில் சம்பந்தப்பட்டுள்ளவர்களை அரசாங்கம் ஒரு போதும் தற்காக்காது.

அதில் விட்டுக்கொடுக்கும் போக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்துக் ஶ்ரீ மோகாமாட் சாபு திட்டவட்டமாக கூறினார்.

அவ்விவகாரத்தை கண்காணிப்பதற்கென மலேசிய போட்டியாற்றல் ஆணையம் – MyCC உள்ளது. இதற்கு முன்பு, கோழிகளுக்கான தீவனத்தில் அதிக இலாபத்தை பெறுவதற்காக விலைகளை உயர்த்திய நிறுவனங்கள் மீது அது நடவடிக்கையை எடுத்துள்ளது.

தற்போது, அரிசி விவகாரத்திலும் MyCC கண்காணிப்பை மேற்கொண்டு வரும் வேளை, அதிலும் அதிக விலைகளை நிர்ணயிக்கும் போக்கு கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டட்த்துக் ஶ்ரீ மோகாமாட் சாபு கூறினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை