May 22, 2026
Thisaigal NewsYouTube
20 கிலோகிராம் போதைப்பொருள் உட்பட 9 பேர் கைது
தற்போதைய செய்திகள்

20 கிலோகிராம் போதைப்பொருள் உட்பட 9 பேர் கைது

Share:

கெடா, ஏப்ரல் 08-

கெடா, பாடாங் தெராப் -பில் உள்ள மூன்று வெவ்வேறு இடங்களில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரையில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஒன்பது பேர் உட்பட ஒரு தாய்லாந்து பிரஜையையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சோதனையில் 7 லட்சத்து 30 ஆயிரத்து வெள்ளிக்கு அதிக மதிப்பிலான 20 கிலோகிராம் ஷாபு என்கிற போதைப்பொருள் மற்றும் 130 கிலோகிராம் கெத்தும் இலைகளை போலீசார் கைப்பற்றியதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் கெடா போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை மேற்கொண்ட முதல்கட்ட சோதனையில் 52 வயதுடைய ஆடவர் நக்கா, கம்போங் லம்டின்-னில் கைது செய்யப்பட்டதாக கெடா போலீஸ் தலைவர் டத்தோ பைசால் சல்லெஹ் கூறினார்.

அடுத்தக்கட்ட சோதனையில் 26 முதல் 39 வயதுடைய ஆறு பேரை அன்றிரவு 11 மணியளவில் அவ்விடத்தில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதி வரையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக பைசால் சல்லெஹ் தகவல் வெளியிட்டார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு