சமூக ஊடகங்கள் வாயிலாக திரெங்கானு அரச குடும்பத்தினருக்கு எதிராக அவதூறான மற்றும் அச்சுறுத்தல் விடுக்கக்கூடிய பதிவுகளை இட்டதாகத் தொடரப்பட்ட ஐந்து வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்ட நபர் சிப்பாங், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அஸ்மான் ஹக்கீம் ஹசானுடின் என்ற அந்த 35 வயது நபர், கடந்த பிப்ரவரி மாதம் தனது 'எக்ஸ்' பக்கத்தில் இந்த அவமதிப்புப் பதிவுகளை வெளியிட்டதாகத1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.
அந்த நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி அஹ்மத் ஃபுவாத் ஒத்மான், அந்த நபரின் மனநிலை குறித்து ஆய்வு செய்ய அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார். இக்குற்றச்சாட்டின் கீழ் அதிகபட்சமாக 5 லட்சம் ரிங்கிட் வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.








