Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கடற்படை பயிற்சி வீரர் சூசைமாணிக்கம் மரணம்  நீதி கேட்டு தந்தை ஜோசப் போராட்டம்
தற்போதைய செய்திகள்

கடற்படை பயிற்சி வீரர் சூசைமாணிக்கம் மரணம் நீதி கேட்டு தந்தை ஜோசப் போராட்டம்

Share:

கோலாலம்பூர், மார்ச் 7 -

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, பேரா, லூமுட் , அரச மலேசிய கடற்படைத் தளத்தில் நடைபெற்ற பயிற்சியின் போது உயிரிழந்த ஒரு பயிற்சி வீரரான தமது மகன் J. சூசைமாணிக்கத்தின் மரணத்திற்கு காரணமானவர்கள், இதுவரையில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படாதது தொடர்பில் நீதி கோருகிறார் தந்தை ஸ். ஜோசப்.

பயிற்சி வீரரான 27 வயது சூசை மாணிக்கம் மரணத்தில் அலட்சிப்போக்கும், கவனக்குறைவும் நிகழ்ந்து இருப்பதாக கூறி, அரசாங்கம் மற்றும் இதர 14 தரப்பினருக்கு எதிராக தந்தை ஜோசப் தொடுத்துள்ள சிவில் வழக்கு, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.

கூட்டரசு வழக்கறிஞர் அப்துல் ஹக்கிம் காரெம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சூசை மாணிக்கத்தின் 71 வயது தந்தை ஜோசப், தமது மகன் கடலில் நடைபெற்ற பயிற்சியின் போது உயிரிழந்ததாக தெரிவித்தார்.

தமது மகன் இறந்த மறுநாளான 2018 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி தாம் போலீசில் புகார் செய்ததாகவும், மூச்சுத்திணறலினால் அவதியுற்ற தமது மகனுக்கு முதல் உதவி சிகிச்சையை அளிக்க அந்த கடற்படைத் தளத்தின் பணியாளர்கள் தவறிவிட்டனர் என்றும் அந்த புகாரில் குறிப்பிட்டதாக ஜோசப் தெரிவித்தார்.

தமது மகன் கடற்படை பயிற்சிக்கு செல்லும் போது ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் இருந்ததாகவும், பயிற்சிக்கு பின்னரே அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டதாக தந்தை ஜோசப் தமது சாட்சியத்தில் விவரித்தார்.

தமது மகனின் இறப்புக்கு காரணமானவர்கள் இதுவரையில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படாதது தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளதாக என்று தந்தை ஜோசப் தமது சாட்சியத்தில் தெரிவித்தார்.

இவ்வழக்கில் சூசைமாணிக்கம் குடும்பத்தினர் சார்பில் வழக்கறிஞர்கள் சைட் மாலெக் மற்றும் லாதேபா கோயா ஆகியோர் ஆஜராகியுள்ளனர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்