May 22, 2026
Thisaigal NewsYouTube
இஸ்லாமியர்கள் உணர்வு சார்ந்த விவகாரங்களில் கவனம் தேவை
தற்போதைய செய்திகள்

இஸ்லாமியர்கள் உணர்வு சார்ந்த விவகாரங்களில் கவனம் தேவை

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 02 -

இஸ்லாம் சார்ந்த உணர்வுப்பூர்வ விவகாரங்களை விவாதிப்பதில் கவனமாக செயல்படுமாறு அரசாங்கத்திலுள்ள தலைவர்களுக்கும் சமூக தலைவர்களுக்கும் அம்னோ சமய மன்றம் நினைவுறுத்தியுள்ளது.

அது இஸ்லாமியர்களிடையே தவறான புரிந்துணர்வை ஏற்படுத்துவதோடு விவாதங்களை ஏற்படுத்தி ஒருவரை ஒருவர் சாடும் நிலைமை ஏற்படுத்திவிடும் என அது எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நாட்டிலுள்ள இஸ்லாம் அல்லாதவர்களை இழிவுபடுத்தும் வகையில் கூறப்படும் காபிர் என்ற சொல் நிராகரிக்கப்பட வேண்டுமென கல்வியமைச்சர் பட்லினா சிடேக் கூறியிருந்ததை சுட்டிக்காட்டி அந்த மன்றம் அவ்வாறு கூறியது.

அந்த சொல் இஸ்லாம் அல்லாதவர்களைக் குறிப்பதற்காக பயன்படுத்துவதால், எவ்வித எதிர்மறை உணர்வைக் கொள்ள தேவையில்லை என அம்னோவின் சமயம் மன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்பு, இந்நாட்டிலுள்ள இஸ்லாம் அல்லாதவர்களின் மனதை புண்பட செய்யும் காபிர் சொல்லைப் பயன்படுத்த வேண்டாமென தனது பிள்ளைகளுக்கு தாம் கூறியிருந்த கூற்று தவறாக அர்த்தப்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்கான மன்னிப்பையும் பட்லினா சிடேக் கூறியிருந்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு