Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இஸ்லாமியர்கள் உணர்வு சார்ந்த விவகாரங்களில் கவனம் தேவை
தற்போதைய செய்திகள்

இஸ்லாமியர்கள் உணர்வு சார்ந்த விவகாரங்களில் கவனம் தேவை

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 02 -

இஸ்லாம் சார்ந்த உணர்வுப்பூர்வ விவகாரங்களை விவாதிப்பதில் கவனமாக செயல்படுமாறு அரசாங்கத்திலுள்ள தலைவர்களுக்கும் சமூக தலைவர்களுக்கும் அம்னோ சமய மன்றம் நினைவுறுத்தியுள்ளது.

அது இஸ்லாமியர்களிடையே தவறான புரிந்துணர்வை ஏற்படுத்துவதோடு விவாதங்களை ஏற்படுத்தி ஒருவரை ஒருவர் சாடும் நிலைமை ஏற்படுத்திவிடும் என அது எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நாட்டிலுள்ள இஸ்லாம் அல்லாதவர்களை இழிவுபடுத்தும் வகையில் கூறப்படும் காபிர் என்ற சொல் நிராகரிக்கப்பட வேண்டுமென கல்வியமைச்சர் பட்லினா சிடேக் கூறியிருந்ததை சுட்டிக்காட்டி அந்த மன்றம் அவ்வாறு கூறியது.

அந்த சொல் இஸ்லாம் அல்லாதவர்களைக் குறிப்பதற்காக பயன்படுத்துவதால், எவ்வித எதிர்மறை உணர்வைக் கொள்ள தேவையில்லை என அம்னோவின் சமயம் மன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்பு, இந்நாட்டிலுள்ள இஸ்லாம் அல்லாதவர்களின் மனதை புண்பட செய்யும் காபிர் சொல்லைப் பயன்படுத்த வேண்டாமென தனது பிள்ளைகளுக்கு தாம் கூறியிருந்த கூற்று தவறாக அர்த்தப்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்கான மன்னிப்பையும் பட்லினா சிடேக் கூறியிருந்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்