வடக்கு பேராக் மற்றும் பினாங்கில் சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகத்தை வழங்குவதற்கு Sungai Perak - விலிருந்து Bukit Merah அணை வரையிலான நீர் விநியோக திட்டத்தை அமல்படுத்த 4 பில்லியன் வெள்ளியை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதி Kerian - னில் உள்ள ஒருங்கிணைந்த பசுமை தொழில் பூங்காவிற்கு பயனாக அமையும் என்று பிரதமர் Dato Sri Anwar Ibrahim வலியுறுத்தினார்.பேரா மாநிலத்தில் நீரின் விநியோகம் சிறப்பாக நிர்வகிக்கப்படும்யானால் அது பெரிதளவில் பங்காற்றும் என்று Kigip Master திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தி வைத்து பேசுகையில் பிரதமர் அன்வார் இதை கூறினார்.
இத்திட்டத்தை அமல்படுத்த 4 பில்லியன் வரையில் செலவிட நேரிடும் என்பதால் அரசாங்கம் அந்த பொறுப்பை எடுத்து கொள்வதுடன் விரைவில் அதற்கான வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.








