Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இந்து அறப்பணி வாரியம் மூன்று இந்திய மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது
தற்போதைய செய்திகள்

இந்து அறப்பணி வாரியம் மூன்று இந்திய மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது

Share:

பினாங்கு, மார்ச் 31 -

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மூன்று இந்திய மாணவர்களுக்கு இன்று நிதியுதவி வழங்கியுள்ளதாக அதன் துணைத்தலைவரும், செனட்டருமான டாக்டர் ஆர். லிங்கேஸ்வரன் கூறினார்.

சார்வின் என்பவர் வணிகம் மற்றும் மேலாண்மை துறையில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவன். குடும்பத்தில் ஒரே மகனாக இருந்து வரும் சார்வின், அவரின் தந்தை ஒரு முன்னாள் இராணுவ வீரர் என்பதுடன் அவரின் தாயார் உடலமின்றி இருப்பதாலும் அவரின் மருத்துவ செலவுகளுக்கே அதிக பணம் செலவிட நேரிடுகிறது. சார்வினின் கல்வி படிப்பிற்கு உதவும் வகையில் அம்மாணவனுக்கு குறிப்பிட்ட தொகை நிதியுதவியாக வழங்கப்பட்டது.

அடுத்த ஒரு மாணவியாக நிவேதா. அம்மாணவி Architecture துறையில் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவி. தொழிற்சாலை தொழிலாளியாகவும், துப்புரவு தொழிலாளியாகவும் பணிபுரியும் அவரின் பெற்றோர்கள் மாதம் வருமானமாக 2,000 வெள்ளிக்கு குறைவாகவே பார்கின்றனர். மேலும், அவருக்கு கீழ் இரண்டு பேர் பயின்று வருவதாக தெரியவந்துள்ளது. அம்மாணவிக்கு ஆதரவளிக்கும் வகையில் நிதியுதவி வழங்கப்பட்டது.

ஒரு குடும்பத்தை உயர்த்தி மேலே கொண்டு செல்வதற்கு கல்வி என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம், பல இந்திய மாணவர்கள் உயர்கல்வியை முடிக்கவும் அவர்களின் குடும்ப பொருளாதாரத்தை மாற்றியமைக்கவும் உதவுவதில் உறுதியாக இருப்பதாக டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்