Aug 6, 2026
Thisaigal NewsYouTube
ஒற்றுமை அரசாங்கம் அடுத்த 4 ஆண்டுகள் வரை தாக்குப்பிடிக்கும் - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் நம்பிக்கை
தற்போதைய செய்திகள்

ஒற்றுமை அரசாங்கம் அடுத்த 4 ஆண்டுகள் வரை தாக்குப்பிடிக்கும் - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் நம்பிக்கை

Share:

தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் அடுத்த 4 ஆண்டுகள் வரையில் தாக்குப்பிடிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நடப்பு அரசாங்கம் போதுமான பெரும்பான்மையை கொண்டு இருப்பதால் அடுத்த பொதுத் தேர்தல் வரையில் நிலைத்தன்மையுடன் தொடர்ந்து வழிநடத்தப்படும் என்று பிரதமர் விளக்கினார்.
எதிர்க்கட்சியினரின் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளவும், சமாளிக்கவும் ஒற்றுமை அரசாங்கம், போதுமான வலிமையை கொண்டு இருப்பதால் அவர்களால் தீபகற்பத்தின் தென் மாநிலங்களை ஊடுரு முடியும் என்பது நிச்சயம் பகல் கனவாக மட்டுமே இருக்க முடியும் என்று பிரதமர் விளக்கினார்.

நாடாளுமன்றத்தில் தமது தலைமையிலான அரசாங்கத்திற்கு போதுமான எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதால் அடுத்த 4 ஆண்டுகள் வரையில் எவ்வித இடயூறின்றி அரசாங்கத்தை வெற்றிகரமாக வழிநடத்திச் செல்ல முடியும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கு இன்று ஒரு நாள் அலுவல் பயணத்தை மேற்கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அனவார், Asia Milken கழகத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான உச்சநிலை மாநாட்டில் நடத்தப்பட்ட சிறப்பு சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’