Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம்-மிற்கு எதிராக போலீசில் புகார்
தற்போதைய செய்திகள்

மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம்-மிற்கு எதிராக போலீசில் புகார்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 19-

மனித வள அமைச்சர் என்ற முறையில் ஸ்டீவன் சிம், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்று கூறி தேசிய வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கமான NUBE இன்று போலீசில் புகார் செய்துள்ளது.

NUBE-யின் அனைத்து 5 கிளைகளின் பிரதிநிதிகளும் இந்த போலீஸ் புகார்களை செய்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டின் வங்கி ஊழியர்களுக்கான பண்டிகை கால உதவித் தொகை விவகாரத்தை வங்கி ஊழியர்களை பிரதிநிதிக்கும் பிரதான தொழிற்சங்கமான NUBE- க்கு தெரியாமலேயே MCBA எனப்படும் மலாயன் வர்த்தக வங்கிகள் சங்கத்துடன் கூட்டு சேர்ந்து அமைச்சர் ஸ்டீவன் சிம், மறைமுகமாக விவாதித்துள்ளார்.

வங்கிகள் தனது ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை பண்டிகை கால உதவித்தொகையாக வழங்குவதற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் MCBA-வுடன் NUBE இணக்கம் கண்டு, கையெழுத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்க தொழிலாளர்களின் நலனை காக்க வேண்டிய மனித அமைச்சர் Steven Sim, , முதலாளிமார்கள் சங்கத்துடன் கூட்டு சேர்ந்து தொழிலாளர்களக்கு எதிராக மறைமுக வேலையை செய்துள்ளார் என்று NUBE யின் ஐந்து கிளைகளின் பிரதிநிதிகளும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்