Jun 6, 2026
Thisaigal NewsYouTube
உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி
தற்போதைய செய்திகள்

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

Share:

உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள போதிலும், மலேசியாவிற்கான மருத்துவப் பொருட்கள் விநியோகத்தில் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உறுதியளித்துள்ளார்.

குறிப்பாக, பொது சுகாதாரத்தை பாதுகாப்பது தொடர்பாக, மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களின் இருப்பு விநியோகம் மற்றும் விலை உயர்வு தொடர்பான சவால்களை, சுகாதார அமைச்சு நெருக்கமாக கண்காணிக்கும் என்றும், பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அன்வார் உறுதியளித்துள்ளார்.

அதேவேளையில், சிறு விவசாயிகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களை இலக்காகக் கொண்டு அரசாங்கம் அளித்து வரும் உதவிகள் அனைத்தும் தொடர்ந்து வழங்கப்படுவதை அமைச்சு கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், சவால்கள் பல வந்தாலும், மடானி அரசாங்கம் தொடர்ந்து கடினமாக உழைத்து, கருணையுடன் செயல்பட்டு, மக்களின் நலனையே நாட்டின் முன்னுரிமையாகக் கருதும் என அன்வார் இன்று திங்கள்கிழமை தமது சமூக ஊடக பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலைகள் இருந்த போதிலும், புடி அக்ரி-காமோடிட்டி திட்டமானது தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்