Jun 9, 2026
Thisaigal NewsYouTube
செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Share:

கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் “ஆர்டி6 கேங்” எனப்படும் குண்டல் கும்பலில் உறுப்பினர்களாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 11 ஆடவர்கள் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

22 முதல் 48 வயதிற்குட்பட்ட அவர்கள் அனைவரும், நீதிபதி இஸ்ராலிஸாம் சனுசி முன்னிலையில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தனித்தனியாக வாசிக்கப்பட்டபோது, அதனைப் புரிந்துகொண்டதாக தலையசைத்தனர்.

எனினும், இந்த வழக்கானது, உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

அவர்கள் அனைவரும், கடந்த 2020-ஆம் ஆண்டு, ஜனவரி 14 முதல் இவ்வாண்டு ஏப்ரல் 27 -ஆம் தேதி வரை, செந்தூல் பகுதியில் செயல்பட்டு வந்த அக்கும்பலில் உறுப்பினர்களாக இருந்ததாக, குற்றவியல் சட்டம் பிரிவு 130V(1) கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இக்குற்றமானது நிரூபிக்கப்பட்டால் 5 முதல் 20 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு:  டத்தோ அ. சிவநேசன் சாடல்

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு: டத்தோ அ. சிவநேசன் சாடல்

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

வர்த்தகர் ஆல்பர்ட் தே  மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

வர்த்தகர் ஆல்பர்ட் தே மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணக்கியல் வல்லுநர்களின் பங்களிப்பு அவசியம்: நிதி அமைச்சர் வலியுறுத்தல்

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணக்கியல் வல்லுநர்களின் பங்களிப்பு அவசியம்: நிதி அமைச்சர் வலியுறுத்தல்