May 25, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா
தற்போதைய செய்திகள்

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

Share:

காசா மனிநேய உதவிகளுக்காக குளோபல் சுமூத் ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எஃப்) 2.0 இயக்கத்தில் பங்கேற்ற மலேசிய செயற்பாட்டாளர்கள் மீது இஸ்ரேலிய படையினர் நடத்தியுள்ள தாக்குதல்களை மலேசிய அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேலிய சியோனிச ஆட்சியாளர்களை எதிர்த்து, அனைத்துல நீதிமன்றமான ஐசிஏ-வில் வழக்குத் தொடர மலேசிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தற்போது அவ்வழக்கிற்குத் தேவையான தகவல்களையும் ஆதாரங்களையும் வழக்கறிஞர்கள் சேகரித்து வரும் நிலையில், அப்பணிகள் நிறைவடைந்தததும் மலேசிய அரசாங்கம் சார்பில் அதிகாரப்பூர்வமாக வழக்குத் தொடுக்கப்படும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், நாடு திரும்பிய 28 மலேசிய செயற்பாட்டாளர்களையும் வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமிருடின் ஷாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கடத்தப்பட்ட மலேசிய செயற்பாட்டாளர்கள், சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதைக் கண்டு இனியும் அமைதியாக இருக்கப் போவதில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Related News

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோன... | Thisaigal News