Jun 6, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா
தற்போதைய செய்திகள்

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

Share:

காசா மனிநேய உதவிகளுக்காக குளோபல் சுமூத் ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எஃப்) 2.0 இயக்கத்தில் பங்கேற்ற மலேசிய செயற்பாட்டாளர்கள் மீது இஸ்ரேலிய படையினர் நடத்தியுள்ள தாக்குதல்களை மலேசிய அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேலிய சியோனிச ஆட்சியாளர்களை எதிர்த்து, அனைத்துல நீதிமன்றமான ஐசிஏ-வில் வழக்குத் தொடர மலேசிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தற்போது அவ்வழக்கிற்குத் தேவையான தகவல்களையும் ஆதாரங்களையும் வழக்கறிஞர்கள் சேகரித்து வரும் நிலையில், அப்பணிகள் நிறைவடைந்தததும் மலேசிய அரசாங்கம் சார்பில் அதிகாரப்பூர்வமாக வழக்குத் தொடுக்கப்படும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், நாடு திரும்பிய 28 மலேசிய செயற்பாட்டாளர்களையும் வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமிருடின் ஷாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கடத்தப்பட்ட மலேசிய செயற்பாட்டாளர்கள், சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதைக் கண்டு இனியும் அமைதியாக இருக்கப் போவதில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்