Mar 18, 2026
Thisaigal NewsYouTube
நேபாளிய பாதுகாவலர் நிர்வாகத்தினால் கெளரவிக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

நேபாளிய பாதுகாவலர் நிர்வாகத்தினால் கெளரவிக்கப்பட்டார்

Share:

டாமன்சாரா, மார்ச் 22.

டாமன்சாராவில் உள்ள ஒரு பேரங்காடியின் வாகனம் நிறுத்தும் இடத்தில் கைவிடப்பட்டுக் கிடந்த பெட்டிக்குள் 5 லட்சம் வெள்ளி ரொக்கப்பணம் கட்டுக்கட்டாக இருந்ததை கண்டு, அந்தப் பணப் பெட்டி குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்த ஒரு பாதுகாவலரான நேபாளிய பிரஜை, இன்று தாம் பணியாற்றும் நிறுவனத்தினால் கெளரவிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் இளஞ்சிவப்பு வெள்ளை நிறத்திலான அந்தப் பெட்டியில் பணம் இருப்பதை கண்டு, 30 வயதுடைய அந்த நேபாளிப் பிரஜை, உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்து இருப்பது, அவரின் நேர்மையையும், பொறுப்புணர்ச்சியையும் புலப்படுத்துவதாக ஒரு பாதுகாவலர் நிறுவனமான A5 Security Service நிறுவனம் புகழாரம் சூட்டியது.

39 வயது சிகேற்ப டாவா என்ற அந்த பாதுகாவலருக்கு நிறுவனத்தின் இயக்குநர் ஹர்தீப் சிங்க் ஜஸ்வந்த் இன்று விருது வழங்கி கெளரவித்துள்ளார். அந்த பாதுகாவலரின் நேர்மைமிகுந்த செயலுக்காக தங்களின் பாதுகாவலர் நிறுவனம் பெருமைப்படுவதாக அவர் வர்ணித்துள்ளார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை