May 22, 2026
Thisaigal NewsYouTube
நேபாளிய பாதுகாவலர் நிர்வாகத்தினால் கெளரவிக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

நேபாளிய பாதுகாவலர் நிர்வாகத்தினால் கெளரவிக்கப்பட்டார்

Share:

டாமன்சாரா, மார்ச் 22.

டாமன்சாராவில் உள்ள ஒரு பேரங்காடியின் வாகனம் நிறுத்தும் இடத்தில் கைவிடப்பட்டுக் கிடந்த பெட்டிக்குள் 5 லட்சம் வெள்ளி ரொக்கப்பணம் கட்டுக்கட்டாக இருந்ததை கண்டு, அந்தப் பணப் பெட்டி குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்த ஒரு பாதுகாவலரான நேபாளிய பிரஜை, இன்று தாம் பணியாற்றும் நிறுவனத்தினால் கெளரவிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் இளஞ்சிவப்பு வெள்ளை நிறத்திலான அந்தப் பெட்டியில் பணம் இருப்பதை கண்டு, 30 வயதுடைய அந்த நேபாளிப் பிரஜை, உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்து இருப்பது, அவரின் நேர்மையையும், பொறுப்புணர்ச்சியையும் புலப்படுத்துவதாக ஒரு பாதுகாவலர் நிறுவனமான A5 Security Service நிறுவனம் புகழாரம் சூட்டியது.

39 வயது சிகேற்ப டாவா என்ற அந்த பாதுகாவலருக்கு நிறுவனத்தின் இயக்குநர் ஹர்தீப் சிங்க் ஜஸ்வந்த் இன்று விருது வழங்கி கெளரவித்துள்ளார். அந்த பாதுகாவலரின் நேர்மைமிகுந்த செயலுக்காக தங்களின் பாதுகாவலர் நிறுவனம் பெருமைப்படுவதாக அவர் வர்ணித்துள்ளார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு