Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நேபாளிய பாதுகாவலர் நிர்வாகத்தினால் கெளரவிக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

நேபாளிய பாதுகாவலர் நிர்வாகத்தினால் கெளரவிக்கப்பட்டார்

Share:

டாமன்சாரா, மார்ச் 22.

டாமன்சாராவில் உள்ள ஒரு பேரங்காடியின் வாகனம் நிறுத்தும் இடத்தில் கைவிடப்பட்டுக் கிடந்த பெட்டிக்குள் 5 லட்சம் வெள்ளி ரொக்கப்பணம் கட்டுக்கட்டாக இருந்ததை கண்டு, அந்தப் பணப் பெட்டி குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்த ஒரு பாதுகாவலரான நேபாளிய பிரஜை, இன்று தாம் பணியாற்றும் நிறுவனத்தினால் கெளரவிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் இளஞ்சிவப்பு வெள்ளை நிறத்திலான அந்தப் பெட்டியில் பணம் இருப்பதை கண்டு, 30 வயதுடைய அந்த நேபாளிப் பிரஜை, உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்து இருப்பது, அவரின் நேர்மையையும், பொறுப்புணர்ச்சியையும் புலப்படுத்துவதாக ஒரு பாதுகாவலர் நிறுவனமான A5 Security Service நிறுவனம் புகழாரம் சூட்டியது.

39 வயது சிகேற்ப டாவா என்ற அந்த பாதுகாவலருக்கு நிறுவனத்தின் இயக்குநர் ஹர்தீப் சிங்க் ஜஸ்வந்த் இன்று விருது வழங்கி கெளரவித்துள்ளார். அந்த பாதுகாவலரின் நேர்மைமிகுந்த செயலுக்காக தங்களின் பாதுகாவலர் நிறுவனம் பெருமைப்படுவதாக அவர் வர்ணித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்