Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சபா நாயகருக்கு கடிதம் இன்னும் அனுப்பப்படவிலை
தற்போதைய செய்திகள்

சபா நாயகருக்கு கடிதம் இன்னும் அனுப்பப்படவிலை

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 13-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தங்கள் ஆதரவை தெரிவித்ததற்காக பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள 6 நாடாளுமன்ற எம்.பி.க்கள் நிலை குறித்து மக்களவை சபாநாயகர் ஜொஹாரி அப்துல்- க்கு இன்னும் கடிதம் அனுப்பவில்லை என்று அக்கட்சியின் உதவித் தலைவர் ரொனால்ட் கியாண்டீ தெரிவித்துள்ளார்.

பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஒரு சட்டமன்ற உறுப்பினரும் நோன்புப்பெருநாளை கொண்டாட வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கிலேயே அவர்களின் நிலை குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்று ரொனால்ட் கியாண்டீ குறிப்பிட்டார்.

பெர்சத்து கட்சியை பொறுத்தவரையில் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் இடங்கள் காலியாகி விட்டது. இடைத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் அவர்கள் தங்கள் தொகுதிகளை காலி செய்ய வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடாகும் என்று அவர் விளக்கினார்.

கட்சியை விட்டு நீக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளை இயல்பாகவே காலி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் கட்சியின் அமைப்புச் சட்ட விதியில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை சங்கங்களின் பதிவு அலுவலகமான ROS, அண்மையில் அங்கீகரித்து இருப்பதை ரொனால்ட் கியாண்டீ சுட்டிக்காட்டினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்