Mar 19, 2026
Thisaigal NewsYouTube
KK சூப்பர்மார்ட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தியநபர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்
தற்போதைய செய்திகள்

KK சூப்பர்மார்ட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தியநபர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 29-

கடந்த செவ்வாய் கிழமை பீடோர்- ரில் KK சூப்பர்மாட் வர்த்தகத் தளத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்ட சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மேன்மை தங்கிய பேரா சுல்தான், சுல்தான் நஷ்ரின் ஷா கேட்டுக்கொண்டார்.

இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் இனப்பதற்றம் அதிகரிக்கும் என்று சுல்தான் நஷ்ரின் ஷா தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

KK சூப்பர்மார்ட் வர்த்தகத் தளத்தில் அல்லாஹ் என்ற சொல்லை தாங்கிய காலுறைகளைத் தவறுதாக விற்பனை செய்ததன் விளைவாக சங்கிலித் தொடர்பு விற்பனை நிறுவனமான அந்த வர்த்தகத் தளம், முஸ்லிம்களின் கோபத்திற்கு இலக்கானது.

இதனால் அந்த வர்த்தகத் தளத்தை முஸ்லிம்கள் புறக்கணிக்குமாறு கடந்த மார்ச் 13 ஆம் தேதி அம்னோ இளைஞர் பிரிவு விடுத்துள்ள கோரிக்கையைத் தொடர்ந்து இந்த பெட்ரோல் குண்டு வீச்சும் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் உண்மையிலேயே அச்சத்தை ஏற்படுத்தம் வகையில் உள்ளது என்று சுல்தான் நஷ்ரின் ஷா குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற செயல்கள் தொடர்வதை தடுக்க KK சூப்பர்மாட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்ட சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

குறிப்பாக, இனப் பதற்றம் பரவுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுல்தான் நஷ்ரின் ஷா வலியுறுத்தியிருப்பதாக பேரா அரண்மனை செய்தித் தொடர்பாளர் சாஹிடி சய்னுடின் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை