Mar 20, 2026
Thisaigal NewsYouTube
கோலகுபு பாரு இடைத் தேர்தல் வெற்றி ஒரு தொடக்கமாக அமையலாம்
தற்போதைய செய்திகள்

கோலகுபு பாரு இடைத் தேர்தல் வெற்றி ஒரு தொடக்கமாக அமையலாம்

Share:

வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தரில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெறுமானால், அடுத்த பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை கைப்பற்றுவதற்கு ஒரு தொடக்கமாக அமையலாம் என்று அதன் சிலாங்கூர் மாநில தலைவர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

கோலகுபு பாரு இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றிப் பெற்றால் அது சிலாங்கூர் மாநில அரசை மாற்றி அமைத்து விடாது. ஆனால், பக்காத்தான் ஹராப்பானின் சிலாங்கூர் மாநில அரசை வீழ்த்தி, அந்த மாநிலத்தை கைப்பற்றுவதற்கு நெருங்கி விட்டோம் என்பதற்கு ஒரு தொடக்கமாக மற்றும் சமிக்ஞையாக அமையும் என்று அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

கோலகுபு பாரு இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக போட்டியிடும் கைருல் அஸ்ஹரி சௌத்யை ஆதரித்து, அக்கட்சியின் தேர்தல் கொள்கை அறிக்கையை இன்று கோலகுபு பாருவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உரையாற்றுகையில் முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசாரான அஸ்மின் அலி இதனை தெரிவித்தார்.

தவிர கோலகுபு பாருவில் பெரிக்காத்தான் நேஷனலின் வெற்றியானது, சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் நிலையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து