கோலாலம்பூர், மே 06-
போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறையுடன் மத்திய போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறை ஒன்றிணைந்து மேற்கொண்ட திடீர் சோதனையின் போது மொத்தம் 619 சம்மன்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இச்சோதனையில் மொத்தம் 171 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 63 கார்கள் சட்டவிரோத குற்றங்களுக்காக கைப்பற்றப்பட்டன. மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 23க்கும் 53க்கும் இடைப்பட்ட வயதுடைய 13 ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
வாகன பதிவு எண்களை தவறாக பயன்படுத்தியதற்காக 19 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்கள் மற்றும் போதைப்பொருள் உட்கொண்டதற்காக 19 முதல் 35 வயதிற்கு உட்பட்ட 10 நபர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் மேல் விசாரணைக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சாலையை பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து இதுப்போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை தவிர்க்கவும் இச்சோதனை தீவிரப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.








