பந்திங் நகரில் ஓர் உணவகத்தில் நேற்று முன் தினம் நிகழ்ந்த கைகலப்பில் 7 ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாலை 1.30 மணியளவில் நிகழ்ந்த இந்த அடிதடி சண்டையில் 19க்கும் 47க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 7 ஆடவர்கள் கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கோலலங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் அகமட் ரிதுவான் முகமட் நோர் தெரிவித்தார்.
உணவகத்தில் தங்களுடன் அமர்ந்திருந்த ஒரு பெண்ணிடம் சக ஆடவர் தொல்லைக் கொடுத்ததை தொடர்ந்து வாய் சண்டை தகறாராக மாறி கைகலப்பில் முடிந்தது என்று அகமட் ரிதுவான் குறிப்பிட்டார்.
நேற்று மாலை 4.30 மணிக்கும் இரவு 7.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் போலீசார் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் அந்த எழுவரும் கைது செய்யப்பட்டதாக ரிதுவான் விளக்கினார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


