Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பெர்மிட்யின்றி நிகழ்ச்சியை நடத்தியதற்காக இந்தியாவைச் சேர்ந்த கலைஞர் கைது, மலேசிய இசையமைப்பாளர் சங்கம் ஆதரவு
தற்போதைய செய்திகள்

பெர்மிட்யின்றி நிகழ்ச்சியை நடத்தியதற்காக இந்தியாவைச் சேர்ந்த கலைஞர் கைது, மலேசிய இசையமைப்பாளர் சங்கம் ஆதரவு

Share:

கோலாலம்பூர், மே 03-

கோலாலம்பூரில் உள்ள பிரபல இன்னிசை மையத்தில் பெர்மிட்யின்றி இசை நிகழ்ச்சியை நடத்திய இந்தியாவைச் சேர்ந்த கலைஞரை மலேசிய குடிநுழைவுத்துறையினர் கைது செய்து இருக்கும் நடவடிக்கைக்கு மலேசிய இசையமைப்பாளர் சங்கமான Music Malaysia தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது.

சுற்றுலா விசாவில் மலேசியாவிற்கு வருகை புரியும் இந்தியாவைச் சேர்ந்த கலைஞர்கள், தங்களின் பயண அனுமதியை தவறாக பயன்படுத்தி, கோலாலம்பூரில் உள்ள இன்னிசை மையங்களை ஆக்கிரமித்துக்கொண்டு நிகழ்ச்சிகளை படைத்து வருவது எந்த வகையிலும் நியாயமில்லை. அவர்கள் அவ்வாறு நிகழ்ச்சியை படைக்க விரும்பினால் முறையான அனுமதியை குடிநுழைவுத்துறையினரிடம் பெற வேண்டும் என்று Music Malaysia-வின் தலைவர் ஃப்ரெடி பெர்னாடஸ் தெரிவித்தார்.

வெளிநாட்டு கலைஞர்கள் மலேசியாவில் படப்பிடிப்பு நடத்துவது உட்பட எந்தவொரு நிகழ்ச்சியை படைப்பதாக இருந்தால், அதற்கு முறையாக விண்ணப்பம் செய்து, உரிய வரியை செலுத்தி அனுமதி பெற வேண்டும்.

ஆனால், சுற்றுலா விசாவில் மலேசியாவிற்கு பயணத்தை மேற்கொண்டு, நாட்டின் சட்டங்களை புறக்கணித்துவிட்டு, பொருள் ஈட்டுவதற்காக ஒவ்வொரு இன்னிசை கிளப்பிலும் நிகழ்ச்சியை படைத்து வரும் இந்தியாவைச் சேர்ந்த கலைஞர்களின் செயல் ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று ஃப்ரெடி பெர்னாடஸ் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்