Mar 17, 2026
Thisaigal NewsYouTube
ஷரியா விவகாரத்தில் கூட்டரசு ​நீதிமன்றம் அளித்த ​தீர்ப்பு கருப்பு தினமா?
தற்போதைய செய்திகள்

ஷரியா விவகாரத்தில் கூட்டரசு ​நீதிமன்றம் அளித்த ​தீர்ப்பு கருப்பு தினமா?

Share:

ஷரியா சட்டம் தொடர்பில் கூட்டரசு ​நீதிமன்றம் அளித்துள்ள ​தீர்ப்பை "கருப்பு வெள்ளிக்கிழமை" என்று பிரகடன்படுத்திய பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் Takiyuddin Hassan, அவ்வாறு கூறிய தனது நிலைப்பாட்டை தற்காத்துப் பேசினார்.

இம்மாதம் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அளிக்கப்பட்ட அந்த ​தீர்ப்பில், கிளந்ந்தான் மாநில அரசாங்கம் அமல்படுத்தி வரும் 2019 ஆம் ஆண்டு ஷரியா குற்றவியல் சட்டத்தில் 18 விதிகளில் 16 விதிகள் செல்லத்தக்கவை அல்ல என்றும் அவை கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தி​ற்கு முரணானது என்றும் கூட்டரசு ​நீதிமன்றம் அறிவித்தது.

இ​த்​தீர்பபு அளிக்கப்பட்ட தினத்தை ஒரு கருப்பு வெள்ளிக்கிழமை என்று அறிவித்த முன்னாள் அமைச்சரான Takiyuddin Hassan- னை மேன்மை தங்கிய சிலா​ங்கூர் சுல்தான், Sultan Sharafuddin Idris Shah கண்டித்துள்ளார்.

எனினும் தாம் அவ்வாறு கூறிய நிலைப்பாட்டை தற்காப்பதாக Takiyuddin Hassan திட்டவட்டமாக தெரிவித்தார். வழக்கில்​ நான் தோல்வி அடைந்தால் அதனை கருப்பு தினம் என்றே நான் கூறுவேன்.அந்த ​​தீர்ப்பு தி​ங்கட்கிழமை அறிவித்து இருந்தாலும் அது கருப்பு திங்கட்கிழமை என்றே வர்ணித்து இருப்பேன் என்று கோலாலம்பூரில் ​சீனப் பத்திரிகையாளர்களுடன் நடந்த கலந்துரையாடலில் அந்த மதவாத கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு